ஒரு கணவர்
கூறுகிறார்:
முந்தைய நாள்
அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண்
விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும்
வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.
அத்துடன், சலவை செய்யப்பட்ட
எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும்
ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது!
மாத்திரைகளை
விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்:
டார்லிங், உங்கள் காலை உணவு
அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ
சமையலறைக்குச்
சென்றால், என் மனைவியின்
குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது.
என் மகன்
சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
என் மகனைப்
பார்த்து, நேற்று இரவு என்ன
தான் நடந்தது? என்று வினவினேன்.
என் மகன், அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக
அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே
வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில்
அடிபட்டுக் கொண்டீர்கள்! என்றான்.
குழப்பத்தின்
உச்சத்துக்குச் சென்ற நான் பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு
தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா
தயாராக இருந்திருக்க வேண்டும் ? என்றேன்.
என் மகன்
அமைதியாக அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள்
உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள்
என்றான்...............
No comments:
Post a Comment